Tuesday, April 23, 2013

நாவற் பழம்(அ)நாவல் பழம்


நாவல் பழம் நீரிழிவு அனபர்களின் முதல் தர மருந்துணவு.
நாவல் பழம் சர்க்கரை வியாதி அன்பர்களுக்கு என்றே இறைவனால் படைக்கப்பட்டது என்ற அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது. ஈரலை சரி செய்யும் தன்மைகள் அதிகம் உள்ளது. வயலட் நிறப் பழம். மழைக் காலங்களில் கிடைக்கிறது. இதில் துவர்ப்பு சுவை அதிகம் இருக்கும். குளிர்ச்சி தன்மை மிக்கது.
நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்:
  1. நீர்=78%
  2. மாவுப்பொருள்=20%
  3. புரதம்=0.7%
  4. கொழுப்பு=0.1%
  5. கால்சியம்=0.02%
  6. பாஸ்பரஸ்=0.01%
  7. இரும்புச்சத்து=1 யூனிட்
மற்றும் வைட்டமின் C, வைட்டமின் B, போலிக் அமிலம் உள்ள‌து.
இவை அனைத்தும் 100 கிராம் நாவல் பழச்சாறில்  உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:

  1. சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர்ப்போக்குக் குறையும்.
  2. நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.
  3. மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.
  4. பழம் அதிகம் விளையும் காலத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில் சாப்பிட வேண்டும்.
  5. இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.
  6. நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், இரத்தம் சுத்தமாகி தொழுநோய் முற்றிலும் குணமாகவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.
  7. பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.
  8. அளவோடு சாப்பிட வேண்டும்
  9. நாவல் பழத்தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.
  10. பழத்தையோ, பழச்சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடவேக் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் 3 மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாது.
  11. கல்லீரல், மண்ணீரல் வீக்கம், ஈரல் பிணிகள் சரி செய்யும்.
  12. வயிற்றுவலி, சீதபேதி, சிறுநீரகக்கல் அடைப்பு சரியாகும்.
  13. சர்க்கரை வியாதி அன்பர்கள் தினம் நாவல் சாறு அருந்த கசப்பான அவர்களின் வாழ்வு இனித்திடும்.
  14. நாவல் கொட்டைச்சாறும் அற்புத பலன் தரும்.

குறிப்பு:
  • பாலும், நாவல் சாறும் கலக்கக் கூடாது.

No comments: