Sunday, May 19, 2013

பித்தம் குறைய


நன்கு பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
அறிகுறிகள்:
  • மஞ்சள் நிறத்தில் வாந்தி.
  • தலைச்சுற்றல்.
தேவையான பொருட்கள்:
  1. கொய்யாப்பழம்.
  2. மிளகு.
  3. எலுமிச்சைப் பழச்சாறு.
செய்முறை:
நன்கு பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு, எலுமிச்சைப்பழச்சாறு ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.



செங்கரும்புச் சாறு, எலுமிச்சை பழச்சாறு, சீரகப் பொடி ஆகியவற்றை கலந்து  தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
அறிகுறிகள்:
  • பித்தம்.
  • வாந்தி.
  • தலைச்சுற்றல்.
தேவையான பொருட்கள்:
  1. செங்கரும்புச் சாறு.
  2. எலுமிச்சைப் பழச்சாறு.
  3. சீரகப் பொடி.
செய்முறை:
செங்கரும்புச் சாறு 100 மி.லி, எலுமிச்சைப் பழச்சாறு 30 மி.லி ஆகியவற்றுடன் சீரகப் பொடியை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.



பச்சை வேப்பம் பூ, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அதனுடன் தேங்காய், தேவையான அளவு புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து துவையல் செய்து சாதத்துடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
அறிகுறிகள்:
  • பித்தம்.
  • தலைச்சுற்றல்.
  • வாந்தி.
தேவையான பொருட்கள்:
  1. பச்சை வேப்பம் பூ.
  2. உளுத்தம் பருப்பு.
  3. மிளகாய் வற்றல்.
  4. பெருங்காயம்.
  5. எண்ணெய்.
  6. புளி.
  7. உப்பு.
செய்முறை:
ஒரு கரண்டி பச்சை வேப்பம் பூ, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 மிளகாய் வற்றல், மூன்று துளி பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அதனுடன் தேங்காய் தேவையான அளவு புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து துவையல் செய்து சாதத்துடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.



மஞ்சள் நிறமாக வயிற்றுப்போக்கு, நாக்கு, கடைவாய் ஆகிய பகுதிகளில் புண்கள், உடல் முழுவதும் நெருப்பு சுட்டதுப் போல எரிச்சல், மயக்கம் ஏற்படுதல், உடல் சோர்வாக காணப்படுதல் ஆகியவைகள் பித்தக் கணை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

தேவையான பொருட்கள்:
  1. உசிலம் பட்டை
  2. வசம்பு.
  3. துளசி வேர்.
  4. வில்வ வேர்.
  5. வெங்காயம்.
செய்முறை:
  • உசிலம் பட்டை, வசம்பு, துளசி வேர், வில்வ வேர், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி கஷாயத்தை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
உபயோகிக்கும் முறை:
  • காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வரவேண்டும்.
தீரும் நோய்கள்:
  • பித்தக் கணை நோய் குறையும்.


பொன்னாவாரை வேரை கழுவிச் சுத்தம் செய்து பொடியாக வெட்டி 50 கிராம் அளவுக்கு எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து 300 மில்லி தண்ணீர் விட்டு 200 மில்லியாகச் சுருக்கி வேளைக்கு 100 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
அறிகுறிகள்:
  • பித்தம்.
  • பித்தப்பாண்டு.
தேவையான பொருட்கள்:
  1. பொன்னாவாரை வேர்.
  2. சுக்கு.
  3. மிளகு.
  4. சீரகம்.
செய்முறை:
பொன்னாவாரை வேரை கழுவிச் சுத்தம் செய்து பொடியாக வெட்டி 50 கிராம் அளவுக்கு எடுத்து சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 10 கிராம் சேர்த்து 300 மில்லி தண்ணீர் விட்டு 200 மில்லியாக சுருக்கி வேளைக்கு 100 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.


கொத்துமல்லிக் கீரையை எடுத்து அதனுடன் சிறிது  பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, புளி சோ்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். அதை கடுகு, உளுத்தம் பருப்புடன் சேர்த்து நல்லெண்ணெயில் தாளித்து தினசரி சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

அறிகுறிகள்:
  • பித்தம் அதிகமாக காணப்படுதல்.
  • மயக்கம்.
  • வாந்தி.
  • தலைச் சுற்றல்.
தேவையான பொருட்கள்:
  1. கொத்துமல்லிக் கீரை.
  2. பச்சை மிளகாய்.
  3. இஞ்சி.
  4. புளி.
  5. உப்பு.
  6. கடுகு.
  7. உளுத்தம் பருப்பு.
  8. நல்லெண்ணெய்.
செய்முறை:
கொத்துமல்லிக் கீரையை எடுத்து அதனுடன் சிறிது பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். அதை கடுகு, உளுத்தம் பருப்புடன் சோ்த்து நல்லெண்ணெயில் தாளித்து தினசரி சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.


புளியம்பூவை சுத்தம் செய்து அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லிக்கீரை, கறிவேப்பிலை, புளி இவைகளை சேர்த்து துவையல் செய்து இரண்டு எலுமிச்சைப்பழ அளவு எடுத்து சாத்துடன் சேர்த்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
அறிகுறிகள்:
  • வாந்தி.
  • தலைச்சுற்றல்.
  • மயக்கம்.
தேவையான பொருட்கள்:
  1. புளியம்பூ.
  2. பச்சை மிளகாய்.
  3. உப்பு.
  4. கொத்தமல்லிக்கீரை.
  5. கறிவேப்பிலை.
  6. புளி.
செய்முறை:
புளியம்பூவை சுத்தம் செய்து அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லிக்கீரை, கறிவேப்பிலை, புளி இவைகளை சேர்த்து துவையல் செய்து இரண்டு எலுமிச்சைப்பழ அளவு எடுத்து சாதத்துடன் சேர்த்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால பித்தம் குறையும்.


சடா மஞ்சளை கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி காலையில் மட்டும் குடித்து வந்தால் பித்த சம்பந்தமான நோய்கள் குறையும்.
அறிகுறிகள்:
  • மிகுதியான பித்தம்.
தேவையான பொருட்கள்:
  1. சடா மஞ்சள்
செய்முறை:
சடா மஞ்சளை கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி காலையில் மட்டு குடித்து வந்தால் பித்த சம்பந்தமான நோய்கள் குறையும்.




No comments: