எலுமிச்சைச் சாறில் தேன் சேர்த்தோ, எலுமிச்சைச் சாறு கலந்த பச்சைத் தேநீரில் (Green tea) தேன் சேர்த்தோ தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவத்தோடு கூடுதலாகச் நோயாளிகள் சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை!
மன அழுத்தம், மனச்சோர்வு, மனப்பிறழ்வு முதலான பல மன நோய்களுக்கு நெடுங்காலமாகப் பயனளித்த மருத்துவ மூலிகை, எலுமிச்சை. மனச்சோர்வு மன நோயாவது ஒருசிலருக்கு மட்டுமே. சர்க்கரை நோயாக, ரத்தக்கொதிப்பாக, புற்றாக இன்னும் பல வாழ்வியல் நோயாக உருமாறுவதே அதிகம். எலுமிச்சம் பழச் சாற்றில் லேசான அமிலம் இருந்தால்கூட, அது எளிதில் சீரணித்து, உடலின் காரத்தன்மையை அதிகரிப்பதால், இந்த நோய்களைத் தவிர்க்க உதவிடும்.
ஆகவே, எலுமிச்சை மீது இச்சை கொள்வோம்!
No comments:
Post a Comment