சுப்த என்றால் மல்லாந்து படுத்தல், பரியங்காசனம் என்று கூறுவர். செய்முறை : வஜ்ராசனத்தில் உட்காரவும், பாதங்களில் பின்பக்கம் உட்கார்ந்திருக்க முழங்கைகளின் உதவியால் பின்னால் தாங்கிக் கொண்டு பின்புறம் வளையவும். அப்படியே பின்புறம் தரையில் படுக்கவும். இந்த நிலையில் தலைக்குப் பின்புறம் கைகளை மடக்கி வைக்கவும். பின்னர் முதுகெலும்பை முடிந்த அளவு வளைக்கவும். பலன்கள் : இடுப்பு, தொடை பகுதியில் உள்ள தசைகளைக் குறைக்கும். குறிப்பு : 1. கால்களை அகட்ட முடியாதவர்கள் அப்படியே பின்னால் வளைத்து உள்ளங்கைகளை பின்புறம் தரையில் ஊன்றி செய்து வரவும். 2. சில மாத பயிற்சிக்கு பிறகு கால்களை அகட்டி தரையில் அமர்ந்து பின்னால் படுத்து கை முட்டிகளை தரையில் ஊன்றி செய்து வரவும். பாதி நிலை ஆசனமாகும். 3. மூட்டு வலி அதிகமுள்ளவர்கள் இவ்வாசனத்தை செய்யக்கூடாது.
No comments:
Post a Comment